நிலைவாழ்வு தரும் வான் அமுது
நிலை வாழ்வு தரும் வான் அமுது (நற்கருணை) உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் வாழ்வு தரும் உணவு நானே. என்னை நம்புவோர் நிலை வாழ்வைக்கொண்டுள்ளனர். ( யோவான் 6:48-49) ஒரு நாள் ஒரு இளைஞன், தன்னுடைய வாழ்வில் எழும் பல்வேறு கேள்விகளுக்கும், தேடல்களுக்கும் பதில் தெரித்துக்கொள்ளும் ஆவலோடு ஒரு துறவியை அணுகினான். அந்த துறவி அவன் கையில் எதுவும் எழுதாத, வெறும் புத்தகத்தை கொடுத்து இதனை வாசி, ஆனால் ஒரு நிபந்தனை, காலை நேரத்தில் சூரியன் உதிக்கும் வேளையில் தான் இதனை திறந்து படிக்க வேண்டும் என்றார். அந்த இரவு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த இளைஞன், காலையில் புத்தகத்தை திறந்த போது, அது வெறுமையான பக்கங்களால் காட்சியளித்தது. மிகுந்த ஏமாற்றத்துடனும், குழப்பத்துடனும...